
பேட்டி
இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்டில் மட்டும் விளையாடிவிட்டு இவர் இங்கிலாந்து திரும்புவது சர்ச்சையானது. இதுகுறித்து நேற்று பேட்டி அளித்த ஜோ ரூட், மொயின் அலி இங்கிலாந்து திரும்புவது அவரின் சொந்த முடிவு. இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. ஆனாலும் அவரின் முடிவை மதிக்கிறோம்.

என்னாச்சு
அவரின் அணியுடன் இருக்கும்படி நாங்கள் கூற முடியாது. அவர் பயோ பபுளில் இருந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரை கட்டாயப்படுத்த கூடாது, என்று ஜோ ரூட் கூறினார்.

சர்ச்சை
இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. கொரோனா பயோ பபுளில் வீரர்கள் நீண்ட காலம் இருப்பதால்தான் ஒவ்வொரு வீரருக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதனால்தான் பிரைஸ்டோ, பட்லர் போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதேபோல்தான் மொயின் அலி ஓய்வு எடுக்க விரும்புகிறார்.

எப்படி
அதிலும் இவர் டிசம்பர் இறுதியில் இருந்து பயோ பபுளில் இருக்கிறார். இடையில் கொரோனா வேறு இவருக்கு வந்தது. இதனால் இவர் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார். இதில் என்ன தவறு என்று பலரும் கேட்டுள்ளனர். ஜோ ரூட் பேட்டியை இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

ஐபிஎல்
ஐபிஎல்லை கருத்தில் கொண்டு இவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ஐபிஎல் வருகிறது. இப்போது அலி இங்கிலாந்து அணியுடன் இணைந்தால் ஐபிஎல்லில் விளையாடுவது கஷ்டம். இதை மனதில் வைத்து அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளார்.

ரூட் விமர்சனம்
இதைத்தான் ரூட் விமர்சனம் செய்யும் வகையில் பேசி உள்ளார். இதுதான் தற்போது இங்கிலாந்து அணிக்குள் பிரச்னையை உருவாக்கி உள்ளது. ரூட்டுக்கு ஆதரவாகவும், அலிக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகிறது.

மன்னிப்பு
இந்த நிலையில் மொயின் அலியிடம் ரூட் மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று சென்னையில் மொயின் அலி அறைக்கு சென்ற ரூட் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். உங்களிடம் தவறாக பேசிவிட்டேன், நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று மொயின் அலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications