கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய நிலையில், அந்த அணி 205 ரன்களை குவித்து மற்ற அணிகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் நிதிஷ் ரானா, நாங்கள் ரன்களை துரத்திய விதத்திற்கு பாராட்டியதற்கு நன்றி. ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை. நாங்கள் வகுத்த திட்டத்தில் அவர்கள் பந்து வீசவில்லை.

ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாம் திட்டத்தை சரியாக கையாள வேண்டும். இது 230 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் கிடையாது. ரிங்கு சிங் எப்போதும் அதிரடியாக விளையாடி நம்மை காப்பாற்ற மாட்டார். இருப்பினும் நாங்கள் பேட்டிங்கில் நன்றாகவே விளையாடினோம். ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்றோம். அப்படி செய்யும்போது முடிவு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம் தான். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. ஏனென்றால் 200 ரன்கள் அடித்தால் கூட கொல்கத்தாவில் அது போதாது. இதனை மனதில் வைத்து தான் நாங்கள் தயாராகி வருகிறோம். எங்களுடைய பந்துவீச்சில் கவனம் தேவை.

எங்களுடைய முக்கிய பந்துவீச்சாளர்களை அதிக ரன்களுக்கு சென்றார்கள். ஆனால் அவர்களை நான் குறை கூற விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் தான் எங்களுக்கு சில போட்டிகளில் வெற்றி கொடுத்திருக்கிறார்கள். இன்று நாங்கள் சண்டை போட்டு நெருக்கடி கொடுத்த விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று நிதிஷ் ரானா கூறியுள்ளார்.