டோமினிக்கா : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா யார் யாருக்கு வாய்ப்பு வழங்குகிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த போட்டி டோமினிக்காவில் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அணியில் விராட் கோலி தவிர வேறு யாரும் இங்கு விளையாடிய அனுபவம் கிடையாது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

தொடக்க வீரராக ஜெய்ஷ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்லை நடுவரிசைக்கு அனுப்ப இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி புஜாரா இடத்தில் சுப்மன் கில்லும், நான்காவது வரிசையில் விராட் கோலியும் ஐந்தாவது இடத்தில் ரகானேவும் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இஷான் கிஷனுக்கு முன்னுரிமை வழங்க ரோஹித் சர்மா முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று இரண்டு சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் விளையாட உள்ளனர்.
கள சூழலை பொறுத்து ஒன்பதாவதாக அக்சர் பட்டேலையும் அணி நிர்வாகம் சேர்க்க வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ஷர்துல் தாக்கூர் முகமது சிராஜ் மற்றும் உனாட்கட் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறலாம்.
பிளேயிங் லெவன் : ஜெய்ஷ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரஹானே, கேஎஸ் பரத் / இஷான் கிஷன், ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல்/ ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனாட்கட்