சிறந்த வர்ணனையாளர்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங், தனது அசுர வேக பந்துவீச்சினால் பல முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். இவர் தற்போது உலகின் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளுக்கும், உள்நாட்டு தொடர்களுக்கும் கமெண்டேட்டராக உள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு கூட வர்ணனை செய்ய வந்ததில்லை. இந்நிலையில் டி20 கிரிக்கெட் மீதான தனது பார்வையை விவரித்துள்ளார்.
டி20 போட்டிகள்
அதில் பேசிய அவர், டி20 போட்டிகளானது உலக கிரிக்கெட்டில் ஒரு கறை போன்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கு தேசத்திற்காக விளையாடுவதை விட பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு டி20 தொடர்கள் தான் முக்கியமாக உள்ளது. அதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் நாடானது ஏழை நாடாகும். அங்கு இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியாவில் கொடுப்பது போன்ற அளவிலான ஊதியம் வழங்கப்படமாட்டாது. இதனால் ஒருசில வாரங்களில் 800,000 டாலர்கள் வரை கிடைப்பதால் டி20 லீக் தொடருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனத்தெரிவித்துள்ளார்.
மோசமான விமர்சனம்
ஐபிஎல் தொடரில் ஏன் கமெண்டரி செய்வதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மைக்கேல் ஹோல்டிங், நான் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் தான் கமெண்டரி கொடுப்பேன் என மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டிகளை அவர் ஒரு கிரிக்கெட்டாக கூட மதிக்கவில்லை என சாடியுள்ளார்.
ரசிகர்கள் கொந்தளிப்பு
உலகளவில் உள்ள வீரர்கள் பலர் தங்களது ஃபார்மை நிரூபித்துக்கொள்ளவுன், தங்களது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ளவும் ஐபிஎல் தொடர் உதவி வருகிறது. ஆனால் அப்படிபட்ட போட்டியை கிரிக்கெட்டாகவே மதிக்கவில்லை என ஹோல்டிங் எப்படி கூறலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.