13 முறை பட்ட அவமானம்.. மொத்தமாக ஐபிஎல்லுக்கு முழுக்க போட்ட வீரர்.. எல்லாத்துக்கும் திமிர்தான் காரணம்
சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிகர் ரஹீம் தனது பெயரை பதிவு செய்ய மறுத்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 18ம் தேதி இதற்கான மினி ஏலம் சென்னையில் நடக்கிறது.
சிஎஸ்கே உள்ளிட்ட ஒவ்வொரு அணியும் இந்த ஏலத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. பல புதிய வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் இதில் வாய்ப்பு பெற உள்ளனர்.

எப்படி
இந்த ஐபிஎல் ஏலத்திற்காக பல புதிய வீரர்கள், மூத்த வீரர்கள் தங்கள் பெயரை பதவி செய்துள்ளனர். மார்னஸ் லாபுசேஞ்ச், அர்ஜுன் டெண்டுலர் போன்றவர்கள் தங்கள் பெயரை பதவி செய்துள்ளனர். இவர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டால் அது அவர்களுக்கு முதல் ஐபிஎல் போட்டியாக இருக்கும்.

மொத்தம் எத்தனை
மொத்தமாக 1097 பேர் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதில் 283 பேர் வெளிநாட்டு வீரர்கள். பல வெளிநாட்டு வீரர்கள் இந்த முறையும் ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இல்லை
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிகர் ரஹீம் தனது பெயரை பதிவு செய்ய மறுத்துள்ளார். கடந்த 13 வருடமாக இவர் தனது பெயரை எல்லா வருடமும் ஐபிஎல் தொடரில் பதிவு செய்தார். ஆனால் இவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

ஏலம்
இவர் சிறப்பாக ஆட கூடிய வீரர் என்றாலும் யாரும் ரஹீம் மீது ஆர்வம் காட்டவில்லை. களத்தில் இவர் கொஞ்சம் திமிராக செயல்படுவார். சக வீரர்களிடம் சண்டை போடுவார் என்பதால் யாரும் இவர் மீது ஆர்வம் செலுத்தவில்லை.

ஆர்வம் இல்லை
இதனால் 13 முறையும் இவரை யாரும் எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்த முறை ஐபிஎல் ஏலத்திற்கு இவர் தனது பெயரையே பதிவு செய்யவில்லை. வங்கதேசத்தில் இருந்து ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசர் ரஹ்மான், சவ்மியா சர்க்கார், லிதான் தாஸ், மஹ்மதுல்லா ஆகியோர் ஐபிஎல் ஏலத்திற்கு தங்கள் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications