
தயார்
கடந்த சீசனில் மோசமாக ஆடிய அணிகள் என்றால் அது பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகள்தான். முதல் போட்டியில் இருந்தே பஞ்சாப் தொடர்ந்து தோல்வி அடைந்தது. வெற்றிபெற வேண்டிய வாய்ப்புள்ள போட்டிகளில் கூட தோல்வி அடைந்தது. சூப்பர் ஓவர் தோல்வி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி என்று பஞ்சாப் அணி அதிர்ச்சி அளித்தது.

பஞ்சாப் அணி
கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் கூற வேண்டும். அணியை கே. எல் ராகுல் நன்றாக வழி நடத்தினார். ஆனாலும் பெரிய அளவில் தொடக்கத்தில் வெற்றிபெற முடியவில்லை. கடைசியில்தான் அந்த அணி வென்றது.

நீக்கம்
இந்த நிலையில் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களை நீக்கிவிட்டு புது பொலிவுடன் களமிறங்க பஞ்சாப் முடிவு செய்துள்ளது . அதன்படி அணி ஒன்று தங்கள் அணியின் பெயர், லோகோ, ஜெர்சி நிறத்தை மாற்ற உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று இருக்கும் பெயரை மாற்ற அந்த அணி முடிவு செய்துள்ளார் .

பஞ்சாப்
பஞ்சாப் ஷேர் (சிங்கம்) அல்லது இதேபோன்ற பொருள் கொண்ட பெயர் வைக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா எடுத்த முடிவு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. அணியின் ஆடை நிறமும் பச்சை அல்லது பிங்க் நிறத்திற்கு மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











