
ராஜஸ்தான் லெவன்
இப்போட்டியில், மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (c), இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கைரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், ராஜஸ்தான் அணியில் எவின் லெவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (w/c), ஷிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜெயிப்போம்
இந்த போட்டியில், மும்பை அணியில் இரு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வந்த விக்கெட் டி காக் நீக்கப்பட்டு, வெளியே இருந்த இஷான் கிஷன் மீண்டும் அணியில் கொண்டுவரப்பட்டுள்ளார். அதேபோல், இம்பேக்ட் ஏற்படுத்த முடியாமல் தடுமாறி வந்த க்ருனால் பாண்ட்யா நீக்கப்பட்டு, நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? ஆட்டம் தான். டாஸ் போட்ட பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, முதலில் பேட்டிங் செய்தும் பார்த்துவிட்டோம், பவுலிங் செய்தும் பார்த்துவிட்டோம். எதுவும் பெரிதாக ஒர்க் ஆகவில்லை. ஸோ, இந்த போட்டியில் மீண்டும் சேஸிங் செய்யலாம் என்று நினைக்கிறோம். இலக்கை மனதில் வைத்து ஆடலாம் என்று இருக்கிறோம். எல்லா வியூகமும் எங்களிடம் பக்காவாக இருக்கிறது. அதை களத்தில் செய்லபடுத்துவதே எங்கள் நோக்கம். பாயிண்ட்ஸ் டேபிள் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படல. நன்றாக விளையாடினால் ஆட்டோமேட்டிக்காக வெற்றி எங்களைத் தேடி வரும் என்று கூறியுள்ளார்.

10 ஓவர்களுக்குள் க்ளோஸ்
இந்நிலையில், கடந்த போட்டியில், சென்னைக்கு எதிராக அரைசதம் அடித்து விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 12 ரன்களில் கோல்டர் நைல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். பிறகு, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் பும்ரா ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, 'இதோ வந்துட்டேன்' என்று கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து அவசர அவசரமாக நடையைக் கட்டினார். 41 ரன்களுக்கெல்லாம் அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பிறகு டூபேவும் 3 ரன்களில் அவுட்டாக, நான்காவது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். சென்னையை வெளுத்த அத்தனை வீரர்களும் 10 ஓவர்களுக்குள் க்ளோஸ்.

புலம்பும் ரசிகர்கள்
சென்னை அணியின் மீடியம் ஃபேஸ் பவுலிங்கை, ஒரு நல்ல பேட்டிங் பிட்ச் கிடைத்ததால் விட்டு விளாசிய ராஜஸ்தான் வீரர்கள், இப்போட்டியில் மும்பையிடம் பொட்டிப் பாம்பாக அடங்கிப் போனார்கள். இந்த ஐபிஎல் தொடரிலேயே, உருப்படியாய் ஆதிக்கம் செலுத்தி ராஜஸ்தான் வென்ற ஒரே மேட்ச், சென்னைக்கு எதிரான கடைசியாக விளையாடிய மேட்ச் தான். இந்த ஒரு மேட்சை நம்பி, தங்கள் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் கோப்பையை வென்றுவிடும் என்று சவடால் விட்ட ரசிகர்கள் இப்போது, 'அதெல்லாம் பொய்யா கோபால்' என்று புலம்பாத குறையாக உட்கார்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











