
240 எடுத்தால் மும்பை வெற்றி
இதைத் தொடர்ந்து 240 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. மும்பையின் வாசிம் ஜாபர் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ரகானே 40 ரன் எடுத்து அவுட் ஆனார். இக்கட்டான நிலையில் கவுஸ்துப் பவார் - சச்சின் டெண்டுல்கர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 22 ரன்களை சேர்த்தது. பவார் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

நிலைத்து நின்ற டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கருடன் அபிஷேக் நாயர் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்க மும்பை அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் அபிஷேக் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சரிந்த விக்கெட்டுகள்
அடுத்து வந்த ஆதித்யா தாரே 3 ரன்களிலும் ஹிகென் ஷா 8 ரன்களிலும் எடுத்து ஆட்டமிழக்க மும்பை அணி 190 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய டெண்டுல்கர் அரை சதம் அடித்தார்.

சச்சின் தொடர்ந்து அபாரம்
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 55 ரன்களுடனும் குல்கர்னி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றி பெற வைத்தார் டெண்டுல்கர்
இந்நிலையில் இன்று வெற்றிக்கு தேவையான 39 ரன்களை மும்பை அணி எட்டி வெற்றியைப் பறித்தது. தமது கடைசி ரஞ்சி போட்டி லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 79 ரன்களைக் குவித்திருந்தார். சச்சினின் இந்த ரன்குவிப்பே மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஹரியானாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

உற்சாக கொண்டாட்டம்
வெற்றி பெற்ற மும்பை அணியின் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தோளில் தூக்கி வைத்து மைதானத்தை வலம் வந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











