
இந்திய இளம் வீரர்கள்
நடப்பு ஐ.பி.எல் சீசனில் பலகோடிகள் கொடுத்து வாங்கிய வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து சொதப்பி கொண்டிருக்க, இந்திய இளம் வீரர்கள் பலர் அசத்தி கொண்டிருக்கின்றனர். இந்திய அணிக்காக கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இளம் வீரர்கள், சி.எஸ்.கே.வுடன் தங்கள் அணி மோதும் ஆட்டம் முடிந்தவுடன், சென்னை கேப்டன் தோனியை சந்தித்து ஆலோசனை பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். டி20 உலககோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட உள்ளதால் தோனியிடம் ஆலசோனை கேட்க வரும் இளம் பட்டாளங்களின் எண்ணிக்கை பெருகி விட்டது.

தோனியிடம் ஆலோசனை
நேற்று போட்டி முடிந்த பிறகு சி.எஸ்.கே வீரர்கள் ரூமுக்கு சென்று விட, வழக்கம்போல் தோனி ரசிகர்கள் காலரியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஹைதராபாத் அணியின் இளம் வீர்ர்கள் பலர் தோனியிடம் தங்கள் தொப்பியில் ஆட்டோகிராப் வாங்கிச் சென்றனர். சில வீரர்கள் தோனியிடம் ஆலோசனை கேட்டுச் சென்றனர். தோனியும் பொறுமையாக அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
ரஷித்கான்
இதேபோல் ஹைதராபாத் அணியின் பிரதான வீரரும், உலகின் நம்பர் 1 டி20 ஸ்பின்னரான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், சென்னை கேப்டன் தோனியை சந்தித்தார். அப்போது ரஷித்கான் தோனியின் ஜெர்சியை அவரிடம் இருந்து கேட்டு பெற்றார். இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு சி.எஸ்.கே பேன்ஸ் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

ராகுல் திரிபாதி
இந்த ஐ.பி.எல் தொடரில் இந்திய இளம் வீரர்கள் வெங்கடேஷ், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, ஹர்சல் படேல், கே.எஸ்.பரத் உள்ளிட்ட பலர் கோலோச்சி வருகின்றனர். வருண் சக்ரவர்த்தி ஏற்கனவே இந்திய அணியில் இருக்கும் நிலையில், மற்றவர்களுக்கும் இந்திய அணியில் பிரகாரசமான எதிர்காலம் இருக்கிறது. தோனியுடன் இவர்கள் ஆலோசனை பெறும் நிலையில், இவர்கள் திறமை கூடுதலாக மெறுகேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











