
முதல் இன்னிங்ஸ்
இந்திய அணியின் இந்த சிறப்பான ஸ்கோருக்கு காரணமாக இருந்தவர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி தான். 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்களில் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்களை விளாசினார். மறுமுனையில் பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆடிய ரவீந்திர ஜடேஜா 194 பந்துகளில் 104 ரன்களை அடித்தார்.

ஜடேஜா அசத்தல்
அதிரடி காட்டிய ரிஷப் பண்ட்-ஐ விட, சரியான பார்ட்னர்ஷிப் கொடுத்த ஜடேஜாவுக்கு தான் அதிக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்த பாராட்டுகளின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜடேஜாவிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஜடேஜாவின் பதில்
பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ஜடேஜாவிடம், சிஎஸ்கேவில் கேப்டன்சி சொதப்பல் மற்றும் ஆல்ரவுண்டராக சொதப்பல் என விமர்சனங்கள் எழுந்தது இப்படி ஒரு தரமான கம்பேக் கொடுக்க உத்வேகமாக இருந்ததா? சிஎஸ்கே மீது கோபமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிச்சயம் இல்லை என ஜடேஜா கூறியுள்ளார்.

அதுதான் திருப்தி
ஐபிஎல்-ல் என்ன நடந்தது என்பது எனது மனதில் இல்லவே இல்லை. இந்திய அணிக்காக விளையாடும் போதெல்லாம், அதில் தான் முழு கவனத்தை செலுத்த வேண்டும். அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடுவதை விட எனக்கு வேறு பெரிய மன திருப்தி கிடையாது என ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











