அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தாமதமாக அந்த அணி வீசியதற்காக 20,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது 5வது போட்டியின்போது மும்பை அணி பந்து வீச நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து கேப்டன் ரோஹித்துக்கு 20,000 டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபி எமிரேட்ஸில் நடந்த ஐந்து போட்டிகளிலும் மும்பை தோல்வியைச் சந்தித்து பரிதாபகரமான நிலையில் உள்ளது.
தற்போது மீதமுள்ள 9 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அடுத்த நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற அதற்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.