
அன்பாலோ
கடந்த வாரம், கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவை ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்தார். இந்தச் செய்தி வேகமாக பரவி, கோலி - ரோகித் இடையே சண்டை என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

பிரச்னை கிடையாது
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோலி, ரோகித் சர்மாவுடன் எந்த பிரச்னையும் இல்லை என்றார். இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் யார் பயனடைகிறார்கள் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அணி வீரர்களுடன் கோலி செல்பி எடுத்த போது அதில் ரோகித் இல்லை. அவர் தவானுடன் இருந்த செல்பி படத்தை வெளியிட்டிருந்தார்.
ரோகித் டுவிட்
இந்நிலையில், ரோகித் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, இணையத்தில் வைரலாகி உள்ளது. எப்போதும் நாடு பற்றி வெளிக்காட்டிக் கொள்ளாத ரோகித், திடீரென நான் ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் அணிக்காக வருவதில்லை, நாட்டிற்காக தான் வருகிறேன் என்பது போல் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

இந்த செய்தி யாருக்காக?
இதுபோன்று குறிப்புடன் யாருக்காக அவர் பதிவு செய்துள்ளார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் இது மறைமுகமாக அணியில் யாரும் எனக்கு பெரியவர்கள் இல்லை, நான் நாட்டுக்காக ஆடுபவன் என்பதை குறிக்க இவ்வாறு பதிவிட்டுள்ளரா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications