மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனிக்கு தான் அனைத்து பாராட்டுக்களும் கிடைப்பதாகவும், ரோகித் சர்மாவை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை என்று சுனில் கவாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தோனி ரசிகர்களை சந்தித்த போது, கவாஸ்கர் தனது சட்டையில் தோனியின் ஆட்டோகிராபை வாங்கினார். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், வயிற்று எரிச்சலை காட்டும் வகையில் கவாஸ்கர் பேசியதை தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரி 5 முறை கேப்டனாக கோப்பையை வென்ற ரோகித் சர்மாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததே கிடைப்பதே இல்லை.எலிமினேட்டர் போட்டியில் கூட, ஆகாஷ் மத்வால் பந்து வீசும் போது கூட ஆயுஷ் பதோனிக்கு over the wicket -ம், இடது கை பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரானுக்கு around the wcket லும் பந்துவீசி விக்கெட்டுகளை பெற்றார்.
இதற்கு யாரும் ரோகித் சர்மாவுக்கு பாராட்டு தெரிவிக்கவே இல்லை. ஆனால் இதுவே சிஎஸ்கே விளையாடும் போது, இந்த சம்பவம் நடந்திருந்தால் தோனியை அனைவரும் பெருமையாக பேசி பாராட்டி இருப்பார்கள்.
மேலும் மும்பை முதலில் பேட்டிங் களமிறங்கிய போது இம்பேக்ட் வீரராக நேஹல் வதேரா விளையாடினார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த எந்த அணியும் இப்படி பேட்ஸ்மேனை இம்பக்ட் வீரராக களமிறக்காது. இந்த புதிய மாற்றத்தை ரோகித் செய்து வந்தார். ஆனால், அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை என்று சுனில் கவாஸ்கர் வேதனை கூறினார்.