சரியாகத்தான் சொன்னேன்
இந்த விவகாரம் குறித்து டோணி கூறுகையில், நான் செய்தது சரிதான் என்று இப்போதும் நினைக்கிறேன். நான் எதைச் சரியாக சொன்னேனோ அது சரிதான் என்று இப்போதும் கருதுகிறேன். எது தவறு என்று கருதினேனோ அது தவறு என்று இப்போதும் சொல்கிறேன்.
தவறு செய்தால் அப்படிப் பேச மாட்டேன்
யாராவது தவறு செய்திருந்தால், அது நம் பக்கமே நடந்திருந்தாலும் கூட நான் அவர்களுக்கு ஆதரவாகப் பேச மாட்டேன். தவறு நடந்தது உண்மைதான். எனவேதான் நடந்தது தவறு என்று நான் உறுதியாக கூறினேன்.
அபாண்டம் சொன்னால் சும்மா இருக்க மாட்டேன்
என்னுடைய வீரர் சரியான நிலையில்தான் இருந்தார். ஆனால் அவருக்கு அபராதம் விதிப்பது என்றால் அதை நான் வேடிக்கை பார்க்க முடியாது. நிச்சயம் அவருக்காக நான் ஆதரவு தெரிவிக்கத்தான் செய்வேன். அதேசமயம் அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் அதற்கான தண்டனையை அனுபவிக்கட்டும். அதை நான் தடுக்கப் போவதில்லை. ஆனால் அவர் எல்லை தாண்டவில்லை என்பதை நான் அறிவேன்.
உடல் ரீதியான மோதல் நடந்தது உண்மை
உடல் ரீதியான தாக்குதல் நடந்தது உண்மை. இதை நாங்கள் முறையாக தெரிவித்து விட்டோம். எங்களை அவதூறாகப் பேசியது குறித்துக் கூட நாங்கள் புகார் கூறவில்லை. உடல் ரீதியான தாக்குதலைத்தான் நாங்கள் புகார் கூறினோம். சில தவறான, கடுமையான வார்த்தைகள் பேசப்பட்டன. அதுகுறித்து நாங்கள் எதுவுமே பேசவில்லை.
ஏற்றுக் கொள்ளமுடியாத தாக்குதல்
ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதலை, உடல் ரீதியான தாக்குதலை எப்படி அமைதியாக பார்க்க முடியும். இது மோசமான சம்பவம். எனவேதான் நான் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இதற்கு மேல் ஐசிசியின் பொறுப்பு. என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டியது அவர்கள்தான். அது அவர்களது வேலை. அதற்கு மேல் எனக்கு அதிகாரம் கிடையாது என்றார் டோணி.