
பந்துவீச்சு சிக்கல்
இந்திய அணியில் பேட்டிங் பெரிய சிக்கலை ஏற்படுத்தவில்லை. ரோகித் 11, விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தும், இந்தியா 208 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. ஆனால் பந்துவீச்சு தான் படு மோசமாக உள்ளது. அணியில் இடம்பெற்ற உமேஷ் யாதவ், ஹர்சல் பட்டேல், புவனேஸ்வர் குமார் என 3 வீரர்களுமே ரன்களை வாரி வழங்கினர்.

2 மாற்றங்கள்
விக்கெட்டை எடுக்க வேண்டிய சாஹலும், முதல் ஆட்டத்தில் கொடை வள்ளலாக மாறினார். இதனால், இந்தியா டாஸ் வென்றால் சேஸிங் செய்வதே வெற்றி பெற ஒரே வழி. இருப்பினும் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார். புவனேஸ்வர் குமாரை வெளியே அனுப்பிவிட்டு தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சோக்க வாய்ப்புள்ளது.

பும்ரா
இதே போன்று சாஹலுக்கு பதில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஹர்சல் பட்டேலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நாளைய போட்டியில் கிட்டத்தட்ட களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹ்ர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, அஸ்வின், 9, தீபக் சாஹர், 10,ஹர்சல் பட்டேல், 11, பும்ரா


Click it and Unblock the Notifications