
மாயங் அகர்வால் ஸ்லேஜிங்
இந்த நிலையில், ஐதராபாத் அணியின் பேட்டிங்கின் போது, உம்ரான் மாலிக் பேட்டிங் செய்ய களத்துக்கு தாமதமாக வந்தார். அப்போது பவுண்டரி கோட்டில் நின்று கொண்டிருந்த கேப்டன் மாயங் அகர்வால் உம்ரான் மாலிக்கை வெறுப்பேற்றும் வகையில் ஏதோ பேசினார். ஆனால் உமரான் மாலிக் அதனை கண்டு கொள்ளவில்லை.

உம்ரான் மாலிக் பதிலடி
இதற்கு பதிலடி தரும் விதமாக மாயங் அகர்வால் பேட்டிங் செய்ய வந்த போது , உம்ரான் மாலிக் பந்துவீசினார். மாயங் அகர்வால் விலா எலும்பை பதம் பார்க்கும் வகையில் உம்ரான் மாலிக் பந்துவீசினார். பந்து பட்டதும், சில நொடிகள் வலியை தாங்க முடியாமல் மாயங் அகர்வால் துடித்தார். இருவருக்கும் நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதிவேக பந்துவீச்சு
இதனிடையே, ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக பந்துவீசும் வீரர்களுக்கு தினசரி பரிசு வழங்கப்படுகிறது. இதில் உம்ரான் மாலிக் தொடர்ந்து 14 போட்டியிலும் அதிவேகமாக பந்துவீசியதற்கான விருதை வாங்கினார். இடையில் சில போட்டியில் ரன்களை வாரி வழங்கினாலும், மீண்டும் பார்ம்க்கு திரும்பினார்.
2வது காஷ்மீர் வீரர்
நடப்பு சீசனில் அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இந்திய அணிக்காக விளையாடும் 2வது காஷ்மீர் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். உம்ரான் மாலிக் நல்ல பார்மில் இருப்பதால் அவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு தரப்படும் என நம்புவதாக ரவி சாஸ்த்ரி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications