
ஐபிஎல்-ல் கொரோனா
கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கு முதலில் உறுதியான தொற்று பின்னர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர்கள் லட்சுமிபதி பாலாஜி, மைக் ஹசி ஆகியோருக்கும் பரவியது. இதன் பின்னர் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா, ஐதராபாத் அணி வீரர் விருதிமான் சாஹாவுக்கும் கொரோனா உறுதியானது.

கவலை அதிகம்
இந்நிலையில் வீரர்களுக்கு கொரோனா உறுதியானது போது நடந்த சம்பவங்களை ஐதராபாத் வீரர் விஜய் சங்கர் மனம் திறந்துள்ளார். எனக்கு தகவல் கிடைத்த போது பயத்தை விட வீரர்களின் நிலை குறித்த கவலை தான் அதிகமாக இருந்தது. அதுவும் எனது அணியிலேயே ஒருவருக்கு உறுதியானது கவலையை அதிகரித்தது.

கடினம்
ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட செய்தி அறிந்த தினம், நாங்கள் போட்டியில் விளையாடவிருந்தோம். அந்த செய்தி வருவதற்கு முன்புவரை நாங்கள் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தோம். கடந்த வருடமும் நாங்கள் இதையே தான் அனுபவித்தோம். ஆனால் இது சற்று கடினமான ஒன்று. பயோ பபுளில் வாழ்க்கை சிரமமான ஒன்று. ஆனால் ஒரு வீரராக அதனை பார்க்கும் போது விதிமுறைகளை நாங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று எனத்தெரிவித்துள்ளார்.

வாய்ப்பில்லை
தமிழக வீரரான விஜய் சங்கர் இந்த தொடரில் பெரியளவில் சோபிக்கவில்லை. 7 போட்டிகளில் விளையாடிய அவர் 58 ரன்களை மட்டுமே எடுத்தார். அதே போல பவுலிங்கிலும் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்திருந்தார். இதற்கு காரணம் அவருக்கு அணியில் டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்காததே என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications