டெல்லி: தான் பயப்படும் பந்துவீச்சாளர் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் என கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி பேட்டிங்கில் அசத்தி வருகிறார். கோஹ்லி பேட்டிங் செய்ய வந்தாலே எதிரணியினர் அவரை அவுட்டாக்கும் வரை நிம்மதி இல்லாமல் உள்ளனர்.
பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெயிலை பார்த்து அனைவரும் மிரண்ட காலம் மாறி தற்போது கோஹ்லி தான் டெரராக உள்ளார். கோஹ்லியை பார்த்து அனைவரும் மிரளுகையில் அவர் தன்னை மிரள வைக்கும் பந்துவீச்சாளர் பற்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோஹ்லி கூறுகையில்,
நான் இன்னும் பயப்படும், அவருக்கு எதிராக விளையாடி இருந்தால் பயப்பட்டிருக்கக்கூடிய பந்துவீச்சாளர் என்றால் அது வாசிம் அக்ரம் தான். என்ன வேகம், என்ன திறமை என்றார்.
கோஹ்லி சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கியபோது வாசிம் அக்ரம் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.