
இங்கிலாந்து குடியுரிமை
இந்த சூழலில், அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். அப்போதும் கூட அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் தான் பங்கேற்றார்.

அமீர் அணிக்கு தேவை
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பாக்., கிரிக்கெட் கமிட்டியின் உறுப்பினராக உள்ள வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், அணியில் இருந்து அமீர் புறக்கணிக்கப்படுவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், "நான் உண்மையில் ரொம்பவே ஆச்சரியப்படுகிறேன். ஏனென்றால் அமீர் மிகவும் அனுபவம் வாய்ந்த பவுலர். குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச் சிறந்த பவுலராக விளங்குகிறார். அவர் பாகிஸ்தானின் உலக டி20 அணியில் இருக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன்.

வாய்ப்பு கொடுக்கணும்
சமீப காலமாக அமீர் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் யாரும் தலையிட உரிமை கிடையாது. மற்ற வீரர்களும் தான் ஓய்வு பெறுகிறார்கள். ஏன் அவர்களைப் பற்றி பேசாமல், இவரை மட்டும் பற்றியே பேசுகிறீர்கள்? டெஸ்ட் கிரிக்கெட் தவிர்த்து, மற்ற ஃபார்மட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாட விருப்பம் தெரிவித்தால், அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும்.

தோல்விக்கு அஞ்சாத
உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் வேண்டும். அப்போது தான் அவர்கள், இளம் வீரர்களுக்கு ஆலோசனை கொடுக்க முடியும். அந்த வகையில் அமீர் பாகிஸ்தான் டி20 அணிக்கு தேவை. டி20 அணியில் நாம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும், தோல்விக்கு அஞ்சாமல் விளையாடக்கூடியவர்கள் இருந்தால் மட்டுமே நாம் சிறப்பாக செயல்பட முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











