முதல் பந்து வீசும் முன்பே சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர்
ஹைதராபாத்: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் பைனலில் களமிறங்கியதன் மூலம், புனே அணி பவுலரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் சாதனை படைத்தார்.
10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவிக்கு வருகிறது. இன்று நடைபெறும் பைனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் புனே அணிகள் மோதுகின்றன. இதில் புனே அணிக்காக 17 வயது 228 நாட்கள் வயதுடைய வாஷிங்டன் சுந்தர் களமிறங்கியுள்ளார்.

இதன் மூலம், குறைந்த வயதில் ஐபிஎல் பைனல் விளையாடும் வீரர் என்ற பெருமையை பெற்றார், வாஷிங்டன் சுந்தர்.
இதற்கு முன், குறைந்த வயதில் (19 வயது, 178 நாள்) ராஜஸ்தான் சார்பில் ரவீந்திர ஜடேஜா 2008ம் ஆண்டு நடைபெற்ற பைனலில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக ஆடினார். அந்த போட்டியில் ராஜஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
Story first published: Sunday, May 21, 2017, 20:11 [IST]
Other articles published on May 21, 2017


Click it and Unblock the Notifications