எடுக்கவில்லை
ஐபிஎல் 2014ல் பெங்களூரு அணிக்காக 14 கோடி கொடுத்து வாங்கப்பட்டார் யுவராஜ் சிங். அதற்கு அடுத்த வருடமே டெல்லி அணிக்காக 16 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அதன் பின் சென்ற வருடம் சன் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் இந்த முறை ஐபில் ரிட்டென்ஷனில் அவர் பெயர் இல்லை. மேலும் கம்பீரும் இதில் இடம்பிடிக்கவில்லை.
யுவராஜ் பேட்டிங்
இதற்கு பதில் அளிக்கும் விதமாக யுவராஜ் சிங் நேற்று சையத் முஸ்தபா அலி கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். 4 பவுண்டரி 1 சிக்ஸ் என இவர் ருத்ர தாண்டவம் ஆடினார். 40 பந்துகளில் 50 ரன் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பினார். இதனால் இவரது பஞ்சாப் அணி 170 ரன்கள் எடுத்தது.
கம்பீர்
நானும் எதற்கும் குறைந்தவன் இல்லை என்று அடுத்து இறங்கிய கம்பீர் நிரூபித்தார். இரண்டு சிக்ஸ், ஆறு பவுண்டரி அடித்த கம்பீர் 54 பந்தில் 66 ரன் எடுத்தார். யுவராஜும் இவரது ஆட்டத்தை பார்த்து மலைத்து போனார். ஆனால் 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்து டெல்லி அணி பஞ்சாப்பிடம் தோற்று போனது.
ஏலம்
இந்த ஆட்டத்தை ஐபிஎல் உரிமையாளர்கள் அனைவரும் பார்த்து இருக்கிறார்கள். இந்த போட்டியில் நன்றாக விளையாடிய வீரர்கள் ஐபிஎல் அணிக்கு மிக அதிக விலைக்கு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கம்பீரும், யுவராஜும் மீண்டும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படலாம்.