ஐபிஎல் தொடரில் புற்று நோய் விழிப்புணர்வு.. யுவ்ராஜ்சிங் ஆர்வம்!
டெல்லி: புற்றுநோய் குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறார் யுவராஜ்சிங்.
யுவராஜ்சிங் ஏற்படுத்தியுள்ள யூவிகேன் என்ற கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு அமைப்பு, யுவராஜ் ஆடும் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மேக்ஸ் என்ற தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து யுவராஜ்சிங் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்கிறார்.

மே 1ம்தேதி இந்த கூட்டமைப்பு சார்பில் மேக்ஸ் ஆஸ்பத்திரிகளில் இலவச கேன்சர் பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் டெல்லியில் அடுத்ததாக அந்த அணி மோத உள்ள போட்டிக்கு கேன்சர் பாதித்து மீள போராடி வரும் 100 குழந்தைகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து யுவராஜ்சிங் கூறுகையில், கேன்சரை எதிர்த்து போராடும் தன்மை வெளியில், இல்லை, உள்ளேயிருந்து வர வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். எனவேதான். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறேன் என்றார் அவர்.
Story first published: Wednesday, April 29, 2015, 17:15 [IST]
Other articles published on Apr 29, 2015


Click it and Unblock the Notifications