
ஆர்சிபி
புள்ளிப்பட்டியலில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 3வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 7 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எனவே இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அந்த அணி ப்ளே ஆஃப்-க்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

4வது இடத்திற்கு போட்டி
ஆனால் 4வது இடத்திற்குதான் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் 7 தோல்விகளை பெற்றுள்ளது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் 4 அணிகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
Recommended Video

4 அணிகள் தேவை
4 அணிகளுமே அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் அதிலும் ரன் ரேட் என்பது முக்கிய பங்கி வகிக்கிறது. அப்படி ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.
* கொல்கத்தா அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மற்ற 3 அணிகளை விட அதிக ரன் ரேட்டும் இருப்பதால் சுலபமாக ப்ளே ஆஃப் செல்லும்.
* ராஜஸ்தான அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால் ராஜஸ்தானை விட அதிக ரன் ரேட் உள்ள கொல்கத்தா அணி ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடைந்திருக்க வேண்டும்.
* மும்பை அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் மற்ற 3 அணிகளும் அடுத்த 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோல்வியடைய வேண்டும்.
* பஞ்சாப் கிங்ஸ் அணியும் அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதே போல மற்ற 3 அணிகளும் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

பஞ்சாப் அணி
இந்த 4 அணிகளிலும் கொல்கத்தா, மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளுமே கம்பேக் கொடுத்து வருகிறது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி அவ்வப்போது சொதப்பி வருவதால் ப்ளே ஆஃப்-க்கு நுழையுமா என்ற கேள்வி சுற்றி வருகிறது. எனவே இந்த வருடத்திற்கான ப்ளே ஆஃப் போட்டிகள் கடுமையானதாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











