ராஞ்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சிஎஸ்கே கேப்டன் தோனியின் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், நூலிழையில் உயிர் தப்பினார். அவர் சென்ற கார் சம்பவ இடத்திலேயே தீ பிடித்து எரிந்தது. இதன்பின் அருகில் சென்றவர்களால் காப்பாற்றப்பட்ட ரிஷப் பண்ட், பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
