மும்பை: மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது இதயம் நொறுங்கிவிட்டதாக சக மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் பதிவிட்டுள்ளார்.
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நட்சத்திர வீரர் ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா, மும்பை அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
