மும்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை மாற்றி கொள்வதற்கான டிரேடிங் முறைக்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இனியும் வீரர்களால் பல்வேறு அணிகளுக்கு மாற முடியுமா என்பது குறித்து பார்க்கலாம்.
மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதில் இருந்து ரோகித் சர்மா அணி மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் ரோகித் சர்மாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் மும்பை அணி ரோகித் சர்மாவை கொடுக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.
