ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்த சர்ச்சை ஒன்று தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.
மும்பை அணி இந்த கோப்பைகளை ரோகித் சர்மா தலைமையில் தான் வென்றது. அப்படிப்பட்ட கேப்டனை மும்பை அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை அந்த பொறுப்பில் கொண்டு வந்தது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரோகித் சர்மா ஒரு முறை கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் ரோகித் ஷர்மாவை ஏன் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினோம் என்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் வெளியிட்ட விளக்கத்தை ரோகித் மனைவி நிராகரித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
அது பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தியது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாம், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நேற்றுதான் வந்தார். அப்போது கூட ஹர்திக் பாண்டியாவை அவர் சந்திக்காமல் சென்று விட்டார் என்று செய்திகள் வெளியானது.
இதுபோன்று வீரர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்ற போது கூட ரோஹித் சர்மா பங்கேற்காமல் புறக்கணித்தார் என்ற செய்தி வெளியானது.இந்த நிலையில் அனைத்து வீரர்களும் பங்கு பெற்ற பயிற்சி முகாம் மும்பையில் நடைபெற்றது. இதில் வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோகித் சர்மாவை பார்த்த ஹர்திக் பாண்டியா நேரடியாக அவரிடம் சென்று கட்டி அணைத்தார்.