மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு அந்த பதவிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஐந்து கோப்பையை பெற்று தந்த ரோகித் சர்மாவை மும்பை அணி அவமானப்படுத்தி விட்டதாக அவர்களுடைய ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் மும்பையை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்வதை பல ரசிகர்கள் நிறுத்தினர்.
