சென்னை: அடுத்த மாதம் நடக்கவுள்ள மினி ஏலத்தில் தமிழக வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்சர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனையொட்டி ஏற்கனவே அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார், விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ப்ரிடோரியஸ், ராயுடு, ஜேமிசன், சிசண்டா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்துள்ளது.
