லக்னோ: விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆட்டமிழக்கும் வரை கொஞ்சம் கூட நிம்மதியாக இருந்ததில்லை என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் முடிவடைந்ததில் இருந்து லக்னோ அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த அணி தரப்பில் சிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கும், அர்ஷின் குல்கர்னி ரூ.20 லட்சத்திற்கு, தமிழக வீரர் சித்தார்த் ரூ.2.4 கோடிக்கும், ஆஷ்டன் டர்னர் ரூ.1 கோடிக்கும், டேவிட் வில்லி ரூ.2 கோடிக்கும், முகமது அர்ஷத் கான் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டனர்.
