மும்பை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரே மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகள் 5 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையுடன் இருந்த ரோகித் சர்மாவை திடீரென அவமரியாதை செய்யும் வகையில் பதவிநீக்கம் செய்திருக்க கூடாது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
