சென்னை
சிஎஸ்கே அணியில் இருக்கும் தமிழக வீரர் என் ஜெகதீசன் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அறிமுக ஐபிஎல் போட்டியில் இவர் நன்றாக ஆடினாலும் கடைசி கட்டத்தில் ஸ்பார்க் இல்லை என்று கூறி ஓரம்கட்டப்பட்டார். தொடர்ந்து இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்.
சையது முஷ்டாக்
சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் இவர் சிறப்பாக ஆடினார். தமிழக அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற இவர் முக்கியமான காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஜெகதீசன் இந்த சீசனில் சிஎஸ்கேவில் ஆட வாய்ப்பு பெறுவார் என்று கருதப்பட்டது.
சிஎஸ்கே
ஆனால் உத்தப்பா, மொயின் அலி போன்ற வீரர்கள் வந்து இருப்பதால் சிஎஸ்கே அணியில் மீண்டும் ஜெகதீசன் பேட்டிங் இறங்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இவர் சையது முஷ்டாக் கோப்பையில் நன்றாக ஆடி இருந்தாலும் சிஎஸ்கேவில் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்.
விஜய் ஹசாரே
ஆனால் தொடர்ந்து தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் இவர் நன்றாக ஆடி வருகிறார். இன்று விஜய் ஹசாரே தொடரில் முதல் போட்டியிலேயே ஜெகதீசன் சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த போட்டியில் இவர் 103 பந்தில் 101 ரன்கள் எடுத்துள்ளார்.
கிடைக்காது
இவருக்கு ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்தும் தொடர்ந்து கவலையின்றி ஆடி வருகிறார். இவரின் ஆட்டம் இந்த முறை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. தோனி மனது வைத்தால் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.