
ஐபிஎல்
ஐபிஎல் தொடரில் பொதுவாக ஹைதராபாத் அணி என்றால் பவுலிங் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறலாம். தொடக்கத்தில் இருந்தே ஹைதராபாத் அணி பவுலிங் மீது கவனம் செலுத்தும். ஸ்பீட் பவுலர்கள், ஸ்பின் பவுலர்கள் என்று அந்த அணியிடம் மிகவும் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.

பவுலர்கள்
புவனேஷ்வர் குமார், நடராஜன், சந்தீப் சர்மா, கலீல் அஹமத், மிட்சல் மார்ஷ் என்று சிறப்பான ஸ்பீட் பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர். அதேபோல் ஸ்பின் பவுலர்களும் இருக்கிறார்கள். இப்போது ஹைதராபாத் அணி தங்கள் ஸ்பின் பலத்தை இன்னும் அதிகரித்து இருக்கிறது.

ஸ்பின் பவுலர்கள்
அதன்படி ரஷீத் கான், முகமது நபி ஏற்கனவே அணியில் உள்ள நிலையில் முஜீப் உர் ரஹ்மான் அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் டாப் பவுலர்கள் மொத்தமாக ஹைதராபாத் அணிக்கு சென்றுள்ளனர். அதிலும் வெறும் 1.5 கோடி ரூபாய்க்கு முஜீப் உர் ரஹ்மான் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

பிளான் என்ன
மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்டாக பிளான் போட்டு இவரை ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல்லில் எந்த அணியிடமும் இவ்வளவு வலிமையான ஸ்பின் படை இல்லை. இந்த முறை ஸ்பின் பிட்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் இந்த தொடர் நடப்பதால் ஹைதராபாத் அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications