இது பாராட்டா? அவமானமா?.. சிஎஸ்கே ஏலம் எடுத்த போது 7 அணிகளும் அப்படி செய்தது ஏன்.. பகீர் வீடியோ!
சென்னை: சிஎஸ்கே நேற்று ஏலம் எடுத்த போது 7 அணிகளும் செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
2021 ஐபிஎல் ஏலம் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் அதற்கு ஏற்றபடி வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்.
நேற்று மொத்தம் 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இதில் சிஎஸ்கே அணி முக்கியமான 3 வீரர்களை ஏலம் எடுத்தது.

ஏலம்
அதன்படி சிஎஸ்கே அணி மொயின் அலி, புஜாரா, கே கவுதம் ஆகியோர் எடுக்கப்பட்டனர். புஜாரா டெஸ்ட் வீரர் ஆவார். இவரை அடிப்படை தொகையான 50 லட்சத்திற்கு சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

காரணம்
இவருக்கு எந்த அணியும் முயற்சி செய்யவில்லை. எளிதாக சிஎஸ்கே அணி இவரை ஏலம் எடுத்தது. அணியின் ஓப்பனிங் மாற்று வீரராக இவரை சிஎஸ்கே அணி எடுத்து இருக்கிறது.

கிண்டல்
இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே புஜாராவை எடுத்த போது எல்லா அணிகளும் கைதட்டியது. சிஎஸ்கேவை பாராட்டும் வகையில் எல்லா அணிகளும் கைதட்டியது. ஆனால் இது பாராட்டா , கிண்டலா என்று தெரியவில்லை.
A round of applause 👏🏻 at the Vivo_India #IPLAuction as cheteshwar1 is SOLD to ChennaiIPL. pic.twitter.com/EmdHxdqdTJ
— IndianPremierLeague (IPL) February 18, 2021
வைரல் வீடியோ
என்ன இவரை எல்லாம் ஏலம் எடுக்கிறீர்கள் என்று சிஎஸ்கே பார்த்து சிரித்துக் கொண்டு பிரீத்தி ஜிந்தா கைதட்டினார். அதேபோல் மும்பை, டெல்லி அணியும் கூட சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் விதமாக சிரித்தனர்.

மரியாதை
அதே சமயம் இன்னும் சிலர்.. புஜாராவை சிஎஸ்கே மரியாதைக்காக எடுத்தது. அவர் நன்றாக ஆட கூடிய மூத்த வீரர் என்பதால் சிஎஸ்கே அவருக்கு மரியாதை கொடுக்கிறது. இதை பாராட்டும் வகையிலேயே மற்ற அணிகள் கைதட்டியது .. இது கிண்டலுக்காக அல்ல என்றும் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications