சாஹாவுக்கு கொரோனா
கொரோனா பாதித்த வீரர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த விரிதிமான் சாஹாவும் ஒருவர். அறிகுறிகளுடன் காணப்பட்ட இவருக்கு முதல் 2 பரிசோதனைகளின் போதும் நெகட்டீவ் என வந்த நிலையில் 3வது டெஸ்டில் தொற்று உறுதியானது. மே 3ம் தேதி முதல் சிகிச்சைப்பெற்று வந்த இவர் தற்போது குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
சிஎஸ்கேவுடன் போட்டி
இந்நிலையில் இவர் தனக்கு சிஎஸ்கேவில் இருந்து தான் கொரோனா பரவியிருக்கும் எனக்கூறியுள்ளார். நாங்கள் விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தோம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் விளையாடினோம். ஒருவேளை எனக்கு விமான நிலையத்தில் கொரோனா பரவியிருந்தால் சென்னை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே அல்லது சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே அறிகுறிகள் தென்பட்டிருக்கும் ஆனால் எனக்கு மறுநாள் தான் கொரோனா உறுதியானது.
அங்கிருந்து தான் வந்தது
எனக்கு கொரோனா உறுதியான போது, சிஎஸ்கே அணியில் 2 - 4 பேருக்கு அறிகுறிகள் இருந்தன. சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது நான் களத்தில் சில சிஎஸ்கே வீரர்களுடன் கலந்துரையாடினேன். எனவே அவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருந்துதான் எனக்கு கொரோனா உறுதியாகியிருக்கும்.
அமீரகம் தான் சிறந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தாண்டு விளையாடிய போது வீரர்கள் மற்றொருவருடன் அருகில் இருக்க மாட்டார்கள். பயிற்சி ஆட்டங்களின் போதும் கூட எங்களுடன் யாரும் தொடர்பில் இல்லை. பபுளை யாராலும் உடைக்க முடியாமல் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இந்தியாவில் மைதான ஊழியர்களுடன் கூட தொடர்பில் இருந்தோம். இதனால் கொரோனா சுலபமாக பரவியது.