தாக்குதல், நிறுத்தம்
கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, ஐசிசி நடத்தும் தொடர்களை தவிர, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 தொடர்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
நாசர் உசேன் கருத்து
உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டம் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தனது கருத்தினை வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
நுழைவது சந்தேகம்
2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில், லீக் போட்டிகளில் பாகிஸ்தான் 124 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு நுழைவதே சந்தேகம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவை வீழ்த்தியது
ஆனால், சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து போட்டியை நடத்திய இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இறுதிப் போட்டியிலும் பலம் மிக்க இந்திய அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பதை நாம் அனைவரும் கண்ட ஒன்றே.
வெற்றியே இல்லை
பல வருடங்களாக பாகிஸ்தான் அணியை கவனித்து வருகிறேன். தோல்வி அடைந்த பிறகும் சற்றும் மனம் தளராமல் முன்னேறி தொடரை கைப்பற்றும் அளவிற்கு வல்லமை படைத்தது பாகிஸ்தான் அணி. இதுவரை உலக கோப்பையில் இந்திய அணியிடம் வெற்றியே பெறவில்லை.
மிகுந்த ஆவல்
அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் உலக கோப்பைக்கு களமிறங்குகிறது. எனவே அங்கு நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். உலகில் உள்ள மற்ற ரசிகர்களைப் போலவே அதை பார்க்க நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
பதிலடி தரும் பாக்.
எனவே,இந்திய அணிக்கு எதிராக உலக கோப்பையில் முதல் வெற்றியை பெற பாகிஸ்தான் துடிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் படுதோல்வியடைந்த பிறகு பதிலடி கொடுக்க துடிக்கும் இந்தியாவும் தயாராக உள்ளது. இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி கிரிக்கெட் உலகிற்கு உச்சத்தை பெற்றுத் தரும் என்று கூறினார்.