முதல் டெஸ்ட்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா - மாயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அசத்தினர்.
இந்தியா இமாலய ஸ்கோர்
முதல் நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் 20 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
ஜடேஜா பேட்டிங்
இந்தியாவின் இன்னிங்க்ஸ்-இன் போது ஜடேஜா 500 ரன்களை இந்தியா எட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆடி வந்தார். அப்போது தான் பந்து காணாமல் போன சம்பவம் நடைபெற்றது.
பவுண்டரி சென்ற பந்து
129வது ஓவரின் போது கேஷவ் மகாராஜ் வீசிய ஐந்தாவது பந்து ஜடேஜா பேட் மற்றும் உடலில் படாமல் திசை மாறி பவுண்டரி சென்றது. பீல்டர்கள் யாராலும் பந்தை பிடிக்க முடியவில்லை.
பந்தை தேடிய வீரர்கள்
பவுண்டரி எல்லையை தொட்ட பந்து காணாமல் போனது. பந்து பவுண்டரி எல்லைக்கு பின்னே மழை வந்தால் மூடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த திரைகளுக்கு பின்னே ஒளிந்து கொண்டு இருக்கலாம் என எண்ணி தேடி வந்தனர்.
கேமராமேன் உதவி
அப்போது பந்தை கேமரா உதவியுடன் கண்டுபிடித்த கேமராமேன், பந்து இருக்கும் இடத்தை பெரிதாக்கி மைதானத்தில் இருந்த பெரிய திரையில் தெரியுமாறு காட்டினார். அப்போதும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதை கவனிக்காமல் பந்தை தேடி வந்தனர்.
|
கண்டுபிடித்த மார்கிரம்
பின்னர், தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கிரம் திரையில் பந்தை பார்த்து விட்டு, ஓடி வந்து பந்தை எடுத்தார். தென்னாப்பிரிக்க வீரர்கள் அசடு வழிய சிரித்துக் கொண்டே போட்டியை தொடர்ந்தனர்.
சிரித்த ரசிகர்கள்
இந்த காட்சிகளை கண்ட ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரித்தனர். வர்ணனை செய்பவர்களும் "ஏன்பா.. பந்து இங்கே இருக்குப்பா!" என திரையை பார்த்து விட்டு, கிண்டல் அடித்து சிரித்தனர்.