திணறும் இங்கிலாந்து
அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி விட்டது. இந்தியாவின் அதிரடி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 180 ரன்களுக்கு சுருண்டு போனது.
பரிதாப பேட்டிங்
ஜானி பிரிஸ்டோ 28, டேவிடன் மாலன் 20, கேப்டன் ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்தனர். அலிஸ்டர் குக் 0, கீடன் ஜென்னிங்ஸ் 8, பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து சரிந்தது.
அஸ்வின், இஷாந்த் கலக்கல்
இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களையும் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவ் தன் பங்குக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றிக்கு 194
இதையடுத்து தற்போது இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் முரளி விஜய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா சற்று நிதானமாக , அதேசமயம், புத்திசாலித்தனமாக ஆடினால் வெற்றி பெறலாம்.