பாகிஸ்தான் ஆட்டம்
ஒருபுறம் கோலியின் அரைசதம் உதவினாலும், மற்றொரு புறம் அஸ்வினின் புத்திசாலி தனமும் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. ஆட்டத்தின் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற போது முகமது நவாஸ் எப்படியும் லெக் சைடில் வீசுவார் என கணித்த அஸ்வின்,புத்திசாலிதனமாக நகர்ந்து சென்று வைட் வாங்கினார். இதனால் ஆட்டமும் டிராவானது. அதன் பின்னர் தான் கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க அஸ்வினுக்கு சுலபமானது.
த்ரில் ஆட்டம்
பதற்றமான அந்த சூழலில் அஸ்வினின் அந்த புத்திசாலிதனம் தான் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. இதனையடுத்து அவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தன. அஸ்வின் இப்படி ஒரு விஷயத்தை செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை என விராட் கோலியே ஆச்சரியப்பட்டு பேசினார். இந்நிலையில் அதுகுறித்து சுவாரஸ்ய விஷயத்தை அஸ்வின் கூறியுள்ளார்.
அஸ்வினின் பேச்சு
பிசிசிஐ நேர்க்காணலில் பேசிய அவர், "முகமது நவாஸ் வீசிய அந்த ஒரு பந்து டேர்ன் ஆகாமல் பேடில் பட்டு எல்.பி.டபள்யூ ஆகியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என ஒரு ரசிகர் என்னிடம் கேட்டார். அதற்கு என்னுடைய பதில் ஓய்வு அறிவிப்பு தான். நேராக ஓய்வு அறைக்கு சென்றிருப்பேன். உடனடியாக செல்போனை எடுத்து இத்தனை ஆண்டுகள் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி, சிறப்பான கிரிக்கெட் பயணம் என ட்வீட் போட்டு ஓய்வு பெற்றிருப்பேன்" என அஸ்வின் கூறினார்.
அஸ்வின் மீதான நம்பிக்கை
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ச்சியாக வாய்ப்ப்பு கிடைக்காமலேயே இருந்து வருகிறது. இந்தாண்டு தான் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து டிராவிட் வாய்ப்பு தந்துள்ளார். கடந்த நெதர்லாந்து போட்டியிலும் அதனை அஸ்வின் 2 விக்கெட்களை கைப்பற்றி சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.