கங்குலி வார்த்தைகள்
2022ம் ஆண்டு முதல் பாதியில் விராட் கோலி ஃபார்ம் அவுட்டாகியிருந்த சூழலில் சவுரவ் கங்குலி கூறிய வார்த்தைகள் பெரும் மற்றத்தை கொடுத்தன. அதாவது, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ஓய்வு பெற்றுள்ள கோலி, நிச்சயம் ஆசிய கோப்பையில் ரன் அடிப்பார், அதில் இருந்து சிறப்பான சீசன் அவருக்கு இருக்கும் எனக்கூறினார்.
கோலியின் கம்பேக்
கங்குலி கூறியதை போலவே ஆசிய கோப்பையில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். 2023ம் ஆண்டும் கோலி நினைத்ததை விட சிறப்பாக தொடங்கியுள்ளது. இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். அடுத்ததாக அவருக்கு உள்ள சவால் டெஸ்ட் கிரிக்கெட் தான். கடைசி 6 மாதங்களில் 2 டெஸ்ட்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.
புது அட்வைஸ்
இந்நிலையில் கோலிக்கு மீண்டும் ஒரு அட்வைஸை கொடுத்துள்ளார் கங்குலி. அதில், இலங்கை, வங்கதேசத்திற்கு எதிராக கோலி மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார். அஸ்திரேலியாவுக்கு எதிராக மிக முக்கியமான தொடர் வரவுள்ளது. இதில் விராட் கோலியை தான் இந்தியா மிகவும் நம்பியுள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி தனது செயல்பாட்டை முன்னேற்ற வேண்டும்.
இறுதிப்போட்டியின் கணிப்பு
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் இரு அணிகளுமே சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இந்த அணிகள் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதும் என நினைக்கிறேன். இதற்கு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் தர வேண்டும் என சவுரவ் கங்குலி பேசியுளார்.