பத்து வருடங்கள் கடந்து..
பத்தாயிரம் ரன்கள் அடித்தது பற்றி கேட்டதற்கு, "நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இந்த விஷயங்கள் எனக்கு முக்கியமில்லை. ஆனால், என் கிரிக்கெட் வாழ்வில் இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன் என புரிந்து கொள்ள உதவுகிறது. பத்து வருடங்கள் என்பது சிறப்பானது. நான் இந்த விளையாட்டை மிகவும் விரும்புகிறேன். இன்னும் அதிகம் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்" என கூறினார்.
எனக்கு அணி தான் முக்கியம்
"நான் சோர்வாக, மனதளவில் தயாராக இல்லாதது ஆகியவற்றை விட ஒரு ரன் கூடுதலாக அடிக்க வேண்டும் என்பதே முக்கியம். அணிக்கு என்ன தேவையோ அதை செய்வது தான் எனது நோக்கம்" எனவும் கூறினார் கோலி.
6 முறை டைவ் அடிக்க ரெடி
மேலும், "அணிக்காக ஒரு ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றால் நான் நிச்சயம் செய்வேன். ஏன்என்றால் அது தான் என் கடமை. அதற்கு தான் நான் நாட்டுக்காக ஆட தேர்வு செய்யப்பட்டுள்ளேன்" எனவும் கூறினார் கோலி.
கோலியின் முன்னேற்றம்
விராட் கோலி இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆட துவங்கிய போது இருந்ததை விட உடலளவில் தற்போது பல மடங்கு முன்னேறி இருக்கிறார். அதே போல அவரது ரன் குவிக்கும் திறனும் முன்பை விட இப்போது மேம்பட்டு இருக்கிறது.