2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தானில் தங்க பதக்கத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார் டி லீமா. முதல் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்தான் முதலிடத்தில் இருந்தார். தங்கம் அவருக்குத்தான் என்று மைதானத்தில் இருந்தவர் எதிர்பார்த்தனர்.
தரையில் விழுந்த டி லாமா
திடீரென மது போதையில் இருந்த பார்வையாளர் ஒருவர், டி லீமாவின் குறுக்கே புகுந்து தடுத்து அவரை தரையில் தள்ளினார். இதனால் டி லீமாவினால் தொடர்ந்து 30 விநாடிகள் வரை ஓட முடியாத நிலை ஏற்டுகிறது. இதனால் டி லீமாவின் தங்கக் கனவு பறி போனது.
ஒலிம்பிக் கவுரவம்
முதலிடத்தை பிடித்த இத்தாலி வீரர் 2 : 10: 55 விநாடிகளிலும் 2வது இடத்தை பிடித்த அமெரிக்க வீரர் 2:11:29 விநாடிகளிலும் இலக்கை கடந்தனர்.
மறுபடியும் இந்த போட்டி நடத்த வேண்டுமென பிரேசில் கோரிக்கை விடுத்தது. ஆனால் பயன் இல்லை. எனினும் ஸ்பிரிட் ஆப் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விருதை வழங்கி அப்போது டி லீமாவை கௌரவித்தது ஒலிம்பிக் கவுன்சில்.
3 வது இடம்
மது அருந்திய ஒருவரால், டி லீமாவின் ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவு தகர்ந்து போனது. டி லீமா 2 மணிநேரம் 12 நிமிடம் 11 விநாடிகளில் இலக்கினை கடந்த அவரால், வெண்கலப் பதக்கத்தை வென்றார். அப்போது உலகமே டி லீமாவுக்காக பரிதாபப்பட்டது. அந்த மனக் காயத்தை ஆற்றும் வகையில்தான், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்கும் பெருமை தற்போது டி லீமாவிற்கு கிடைத்துள்ளது