வீரர்கள் அணிவகுப்பு
அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது ஆப்கன் வீரர், வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா தலைமையில் அணிவகுத்து சென்றனர். 118 இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். பின்னர் மரக்கானா மைதானத்தில் ரியோ ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.
ஒலிம்பிக் தீபம்
தொடர் ஓட்டம் மூலமாக, ரியோ டி ஜெனிரோ கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாரத்தான் வீரர் வாண்டர்லீ டி லீமா ஏற்றிவைத்தார். இவர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணையாத தீபம்
தீபம் ஏற்றப்பட்டதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகள் முறைப்படி, தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. போட்டி முடியும் 21ம் தேதி வரை, ஒலிம்பிக் தீபம் தொடர்ந்து எரிந்தபடி இருக்கும். இன்று தொடங்கி, வரும் 21ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளின்கீழ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
பீலே பங்கேற்கவில்லை
பிரேசில் நாட்டு முன்னாள் நட்சத்திர கால்பந்து ஜாம்பவான் பீலே ,75 உடல்நலக்குறைவால் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் ஜோதியை பீலே ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் அவரால் தொடக்க விழாவில் பங்கேற்கமுடியவில்லை. இது அவரது ரசிகர்களிடையே கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.