இந்திய அணி தோல்வி
விராட் கோலி தலைமையில் பல்வேறு வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்த போதும் ஐசிசி தொடர்களில் கடைசி நேரத்தில் சொதப்பியது. இதனால் தான் அவர் கேப்டன்சியில் இருந்தே நீக்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவுக்கும் அதே சூழ்நிலை உருவாகியுள்ளது. டி20ல் அதிக வெற்றிகளை பெற்று தந்த போதும், இங்கிலாந்துடன் படுமோசமாக சொதப்பியது.
பிசிசிஐ அதிரடி முடிவு
இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கும் பிசிசிஐ கிடுக்குப்பிடி போட்டுள்ளது. 35 வயதாகும் ரோகித் சர்மா இனி டி20 கிரிக்கெட்டிற்கு சரிபட்டு வரமாட்டார் என ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எனவே டி20 அணிக்கான கேப்டன்சியில் இருந்து விரைவில் ஓய்வு பெற்றுவிட்டு, ரோகித் சர்மா பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.
அடுத்த கேப்டன் யார்?
ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா தான் புதிய கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் மிக மோசமாக சொதப்பினார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சிக்கு மிக சரியாக பொருந்தியுள்ளார்
கேப்டன்சி திறமை
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்றுக்கொடுத்து ஹர்திக் பாண்ட்யா அசத்தினார். அவரின் செயல்பாடுகள் அப்படியே தோனியின் சாயல் தெரிகிறது. எவ்வளவு பதற்றமான சூழல் வந்தாலும் தோனியை போலவே பாண்ட்யா நிதானமாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.