
பிசிசிஐ எடுத்த ரிஸ்க்
முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காய பாதிப்பு காரணமாக அவர் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரரான அவரை எப்படியாவது விளையாட வைக்க வேண்டும் என பிசிசிஐ பெரும் ரிஸ்க்-களை எடுத்தது. அதாவது முதல் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டால், அரையிறுதிக்குள் கம்பேக் கொடுப்பார் என கணக்கிட்டது.

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால் அவரின் உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை எனத் தெரிகிறது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாவதற்கு குறைந்தது 4 - 5 வாரங்கள் ஆகுமாம். இதனை முடித்துவிட்டு நேரடியாக முக்கிய போட்டிகளில் விளையாடுவது சாதாரணம் அல்ல. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டுள்ளார்.

பும்ரா பதிவு
இந்நிலையில் இதுகுறித்து பும்ரா உருக்கமாக பேசியுள்ளார். அதில், இந்த முறை டி20 உலகக்கோப்பையில் நான் இல்லாதது மன வேதனையாக உள்ளது. எனது நலனுக்காக வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி. நான் குணமடைந்தவுடன் இந்திய அணியை உற்சாகப்படுத்த நிச்சயம் அவர்களுடன் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

மாற்று வீரர்கள்
ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரரை தேடும் பணியில் பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. தற்போதைக்கு முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகிய மூவர் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஷமிக்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











