
ஸ்ரேயாஸ் ஐயர்
எட்டாவது ஓவரில் ஹர்பஜன் சிங் பந்து வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை ஹர்பஜன் சிங் வீச ஓடி வந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன் தவானுக்கு எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார்.

மிரள வைத்த ஹர்பஜன்
பந்து வீச ஓடி வந்த ஹர்பஜன் சிங் கிரீஸ் அருகே வந்தவுடன் அப்படியே நின்றார். ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து முறைத்த ஹர்பஜன் சிங் மீண்டும் பந்து வீசச் சென்றார். அதாவது ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசும் முன், கிரீஸை விட்டு முன்னேறிச் செல்கிறார் என்பதைத் தான் ஹர்பஜன் இப்படி முறைப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

அஸ்வின் சர்ச்சை
நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், இதே போன்ற சம்பவத்தின் போது ரன் அவுட் செய்தது பெரும் சர்ச்சை ஆனது. அந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள் இன்னும் நடந்து வரும் நிலையில், ஹர்பஜன் அதை மீண்டும் நினைவுபடுத்தினார்.

அதுவரைக்கும் சந்தோஷம்
ஹர்பஜன் சிங் முறைத்த உடன் பலரும் லேசாக அதிர்ந்தாலும், அஸ்வின் போல அவர் ரன் அவுட் செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளால் எச்சரிக்கை கூட விடுக்கவில்லை. அதுவரைக்கும் சந்தோஷம் என அஸ்வின் விவகாரத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் ஐபிஎல் நிர்வாகம் நினைத்திருக்கும்!!


Click it and Unblock the Notifications
