
வில்லியம்சன் 75 ரன்கள்
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு வென்றது
இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களின் முடிவில் 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் அதிகபட்சமாக ஹெட்மெயர் 75 ரன்களும், குர்கீரத் சிங் 65 ரன்களும் எடுத்து அசத்தினர்.

சுவாரசிய சம்பவம்
வழக்கமாக போட்டியின் போது ஏதோவொரு சுவாரசியமான சம்பவங்கள் நடக்கும். எதிர் பாராத ரன் அவுட்டுகள், சர்ச்சையான ஸ்டெம்பிங்குள், சிக்சருக்கு விளாசும் பந்துகள் ஸ்டேடியத்தை விட்டு காணாமல் போவது என்று பல ருசிகர சம்பவங்கள் நடக்கும். ஆனால், இந்த போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவம், இதுவரை நடக்காத ஒன்று கூட என்று சொல்லலாம்.

ரஷித் வீசிய பந்து
போட்டியின் போது ஒரு முனையில் பெங்களூரு அணி வீரர் ஹெட்மெயர் நின்று கொண்டிருக்கிறார். நான் ஸ்டிரைக் திசையில் குர்கீரத் சிங் நின்று கொண்டு இருக்கிறார். போட்டியின் 5வது ஓவர் அது. பவுலர் ரஷித் கான். அந்த ஓவரின் 5வது பந்தை அவர் வீசுகிறார். 18 ரன்கள் எடுத்திருந்த ஹெட்மெயர் அந்த பந்தை தூக்கி அடிக்கிறார்.
அந்தரத்தில் பறந்த பேட்
பந்து சிக்சருக்கு தான் பறக்கிறது என்று ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க.. மறு முனையில் நின்று கொண்டிருந்த குர்கீரத் சிங் கையில் வைத்திருந்த பேட் அந்தரத்தில் பறந்து சென்று விழுகிறது. என்ன என்று பார்த்தால், ஹெட்மெயரின் பந்து, குர்கீரட் சிங்கின் பேட்டில் பட... ஒரு கணம் பயந்த அவர் பேட்டை அந்தரத்தில் வீசிவிட்டார். பேட் பறக்க, பந்தும் எங்கிருக்கிறது என்று தெரியாமல் அனைவரும் முழிக்க எடுக்க வேண்டிய ஒரு ரன்னையும் எடுக்காமல் குழம்பித் தான் போனார் குர்கீரத் சிங். இப்போது இணையத்தில் இந்த வீடியோ தான் டாப்.


Click it and Unblock the Notifications