ஏன் அந்த சம்பவம்
இந்த நிலையில் இந்த போட்டியில் 11வது ஓவரில்தான் அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த ஓவரை இங்கிலாந்து பவுலர் அடில் ரஷீத் போட்டார். அதுவரை ரஷீத் எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை. இதனால் அவர் விக்கெட்டு எடுக்கும் முனைப்பில் இருந்தார். இதனால் அதற்கு ஏற்றபடி பந்துகளை வீசி வந்தார்.
டி காக் பேட்டிங்
அப்போதுதான் 11 வது ஓவரில் தென்னாபிரிக்கா வீரர் டி காக் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். ரஷீத் போட்ட பந்து ஒன்று, காக் பேட்டில் பட்டு ஸ்டெம்பில் விழுந்தது. இதனால் ஸ்டெம்பில் இருக்கும் எல்இடி விளக்குகள் எரிந்தது. இதனால் விக்கெட் என்று நினைத்துக் கொண்டு இங்கிலாந்து கீப்பர் பட்லர் பந்தை பிடிக்கவில்லை.
பவுண்டரி சென்றது
இதனால் அந்த பந்து பவுண்டரி சென்றது. இதையடுத்து அம்பயர் பவுண்டரி கொடுத்தார். ஆனால் அவர் விக்கெட் கொடுக்கவில்லை. இது இங்கிலாந்து வீரர் எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே இங்கிலாந்து வீரர்கள் அம்பயரிடம் சென்று வாக்குவாதம் செய்தனர்.
|
ஏன் விக்கெட்
ஏன் நீங்கள் விக்கெட் கொடுக்கவில்லை. பந்து ஸ்டெம்பில் பட்டது தெளிவாக தெரிகிறது. ஆனாலும் ஏன் விக்கெட் கொடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தனர். ஆனால் அம்பயர் அப்போதும் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டனர்.
பெயில்ஸ் இல்லை
அந்த பந்து ஸ்டெம்பில் பட்டது உண்மைதான். ஆனாலும் பெயில்ஸ் கீழே விழவில்லை. இதனால்தான் விளக்கு எரிந்தும் கூட விக்கெட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
ரன் எடுத்தார்
இதனால்தான் அந்த பாலில் தென்னாப்பிரிக்கா அணிக்கு பவுண்டரி கொடுக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் வருத்தத்திற்கு உள்ளானார்கள். அதன்பின் டி காக் 68 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த போட்டியில் கடைசியில் இங்கிலாந்து அணிதான் வென்றது.