For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படி வேண்டுமோ ஆடுங்கள்.. அதை மட்டும் மறக்காதீர்கள்.. இந்திய வீரருக்கு ஸ்பெஷல் அனுமதி கொடுத்த கோலி

இந்திய அணியில் முக்கிய வீரர் ஒருவருக்கு அணி நிர்வாகம் ஸ்பெஷல் அனுமதி கொடுத்து இருக்கிறது.

லண்டன்: இந்திய அணியில் முக்கிய வீரர் ஒருவருக்கு அணி நிர்வாகம் ஸ்பெஷல் அனுமதி கொடுத்து இருக்கிறது. அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணி அதிரடி முடிவுகள் சிலவற்றை எடுத்து உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா இங்கிலாந்து இடையே உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் பவுலிங்கை இங்கிலாந்து வீரர்கள் தெறிக்கவிட்டுள்ளனர்.

மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து உள்ளது. இந்த இமாலய இலக்கை நோக்கை இந்திய அணி பொறுமையாக ஆடி வருகிறது.

யார் அவர்

யார் அவர்

இந்த போட்டியில் இந்திய அணியின் டிரம்ப் கார்ட் என்றால் அது பண்ட்தான். ஆம் அவர் இன்று அணியில் எடுக்கப்பட்டதே இது போன்ற பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இங்கிலாந்து அணிக்கு எதிராக இப்படி அதிரடியாக டி 20 பாணியில் ஆட கூடிய வீரர் வேண்டும் என்றே அவரை அணி நிர்வாகம் களமிறக்கி இறக்கி உள்ளது.

அனுமதி

அனுமதி

அதனால்தான் பொறுமையாக ஆடும் விஜய் சங்கர் கழற்றிவிடப்பட்டு இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இதனால் தற்போது ரிஷப் பண்டிற்கு அதிரடியாக ஆட, முதல் பந்தில் இருந்தே பாண்டியா போல அதிரடி காட்ட அனுமதி அளித்துள்ளனர். 30-40 ஓவர்களுக்கு இடையில் இந்திய அணியின் ரன் ரேட் குறையாமல் இருக்க வேண்டும் என்பதே தற்போது பண்டின் வேலை.

ஆதரவு

ஆதரவு

தற்போது இந்திய அணி நிர்வாகத்தின் முழு ஆதரவு பண்டிற்கு இருக்கிறது. இதனால் அவர் எப்படி விருப்பப்படுகிறாரோ அப்படி ஆட முடியும். அதேபோல் ரசிகர்களும் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கிறார்கள். அதற்கு இன்று பண்ட் பெயரை கோலி சொன்ன போது ரசிகர்கள் எழுப்பிய கரகோஷமே சிறந்த உதாரணம் ஆகும்.

சூப்பர்

சூப்பர்

வெறும் 5 ஒருநாள் போட்டிகள் விளையாடிய எந்த ஒரு இளம் வீரருக்கும் ரசிகர்கள் இவ்வளவு ஆரவாரமாக வரவேற்பு அளித்தது கிடையாது. ஆனால் பண்டிற்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அதிரடியாக ஆடும் அதே வேளையில் இவர் அவுட்டாகாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். அதுதான் இவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

ஆடினார்

ஆடினார்

இவர் இன்று நடக்கும் போட்டியில் நன்றாக ஆடி 50+ரன்களுக்கு மேல் அதிரடியாக எடுத்தால்தான் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியும். இதனால் இவர் அதிரடியாக ஆடும் வேளையில் பொறுப்பாக ஆட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பியது போல இனி சொதப்ப கூடாது என்பதே இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் டாஸ்க் ஆகும்.

Story first published: Sunday, June 30, 2019, 20:23 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
ICC World Cup 2019: Indian player gets a special task in the match against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X