
அணியில் இருந்து நீக்கம்
அதிலும் ஜூனியர் டிராவிட் என்று அழைக்கப்படும் ரகானே ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று வந்தார். அதன்பிறகு.. சில மாதங்களாக நீக்கப்பட்டுள்ளார்.

நீடிக்கும் குழப்பம்
உலக கோப்பை போட்டி தொடர் தற்போது நெருங்கி வருகிறது. எனவே.. 4வது இடத்துக்கான பொருத்தமான வீரரை தேர்வு செய்வதில் இனியும் தாமதம் கூடாது என்று கிரிக்கெட் வல்லுநர்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து ஆலோசனை
இதே கருத்தை தான் கங்குலி, லட்சுமண் ஆகியோர் கூறி வந்தனர். அவர்கள் ரகானேவை 4வது இடத்துக்குத் தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ரகானே கருத்து
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே இந்திய அணியில் இடம் பெறுவது குறித்து சில கருத்துகளை கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது:

வாய்ப்பு தேடி வரும்
உலக கோப்பைக்கான அணியில் நான் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. அதற்கு காலம் இருக்கிறது. ஐபிஎல்லில் சூப்பராக ஆடி ரன்களைச் சேர்க்கும் போது இந்திய அணிக்கான வாய்ப்பு தேடி வரும்.

மிகுந்த கவனம்
எனவே... தற்போது எனது கவனம் அனைத்தும் ஐபிஎல் தொடரை நோக்கி தான் உள்ளது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன்.

வாய்ப்பு தானாக வரும்
அதிக ரன்களை அடித்தால் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்து விடும். உலக கோப்பையை பற்றி யோசித்தால் தற்போது ஐபிஎல்லில் கவனம் செலுத்த முடியாது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும்போது, உலக கோப்பை வாய்ப்பு தானாக வரும் என்று ரகானே கூறினார்.


Click it and Unblock the Notifications